Saturday, April 27, 2024
spot_img
Homeசினிமாநடிகர்களுக்கு இன்றொருவர், நாளை ஒருவர் என்ற மனநிலை..திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை

நடிகர்களுக்கு இன்றொருவர், நாளை ஒருவர் என்ற மனநிலை..திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை

திரைத்துறை அனுபவங்கள், ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தை விதைத்தது என்று நடிகை மதுபாலா கூறியுள்ளார்.

நடிகை மதுபாலா 1991ஆம் ஆண்டு அழகன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ, ரோஜா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.

அவருக்கு திருமணம் ஆன பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு திரும்பவும் திரைத்துறையில் மறுபிரவேசம் செய்தார்.

வாயை மூடி பேசவும், தேஜாவு, தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்த போதுதான் எனது இப்போதைய கணவரான ஆனந்தை சந்தித்தேன்.

முதல் முறையாக பார்த்தபோதே அவரை பிடித்துவிட்டதாக நம்பினேன். அவரும் பல இடங்களில் என்னை நெருங்கி வந்தார். அப்படிதான் எங்களுக்குள் காதல் உருவானது.

நாங்கள் சண்டை போட்டால் கூட, ஷோரூமில் காரை தேர்வு செய்வது போல தான் என்னை தேர்வு செய்து விட்டாய் என்று சொல்வேன்.

ஒவ்வொரு சண்டையிலும் நான் எல்லை மீறி பேசினால் அவர் என்னை சரியாக புரிந்துகொண்டு அணுகுவார். நான் எப்படியோ அதுபோல தான் அவரும்.

நான் திரைத்துறையில் நுழையும் போது கண்டிப்பாக ஒரு நடிகரை தான் மணம் புரிவேன் என்று எதிர்பார்த்தேன்.

நடிகர்களுக்கு இன்று ஒருவர், நாளை ஒருவர், நாளை மறுநாள் வேறொருவர் என்று தான் மனநிலை இருக்கும். அதை நான் அனுபவித்திருக்கிறேன்.

அதை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு கிடைத்த சில அனுபவங்களில் கண்டிப்பாக ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்துவிடவே கூடாது என்ற எண்ணத்தை என்னுள்ளே விதைத்தது.

என் கணவர் ஆனந்திற்கு ஃபேண்டஸியாக எல்லாம் காதலிக்க தெரியாது. ஆனால் அவர் காதலுக்கு உண்மையாக இருப்பார்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments