Home Srilanka துப்பாக்கி சூட்டு காயத்துடன் வவுனியாவில் இளைஞனின் சடலம்.

துப்பாக்கி சூட்டு காயத்துடன் வவுனியாவில் இளைஞனின் சடலம்.

0

கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்

குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து சுமார் 100மீற்றர் தொலைவில் சடலம் காணப்படுகிறது மேலும் சடலத்தின் கழுத்துப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்தின் அடையாளம் காணப்படுவதுடன் கட்டுத்துப்பாக்கி ஒன்றும் குறித்த இளைஞரது மோட்டார் சைக்கிளும் அருகில் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதேவேளை சம்பவம் தற்கொலையா அல்லது வேறு பகுதியில் யாரேனும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு குறித்த பகுதியில் சடலத்தை வைத்துவிட்டு தற்கொலை போல் திசை திருப்புவதற்கு செய்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸாரின் விசாரனைகள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version