Home Srilanka Finance இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

0

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 29) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (22) அமெரிக்க டொலரின் பெறுமதி 298 ரூபாவாகவும், வெள்ளிக்கிழமை (26) 292 ரூபாவாகவும் காணப்பட்டது. இந் நிலையில் இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (26) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 292.93 ரூபாவிலிருந்து 287.09 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 308.68 ரூபாவிலிருந்து 302.53 ரூபாவாக சரிந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (26) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 292.74 ரூபாவிலிருந்து 287.03 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 305 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக சரிந்துள்ளது.

சம்பத் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (26) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 295 ரூபாவிலிருந்து 290 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 307 ரூபாவிலிருந்து 302 ரூபாவாக சரிந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version