திருகோணமலையில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியிலேயே குறித்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளது.
சுற்றிவளைப்பின் போது விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த இருபெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரு பெண்களும் 25 மற்றும் 30 வயதினர் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரையும் திருகோணமலை மாவட்ட பதில் நீதவான் முன்னிலையிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.