கல்முனை நோக்கிச் சென்ற தனியார் பஸ் மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து 9 பேர் பலி!
கதுருவலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டி ஒன்று இன்றிரவு (09) மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றனர்.
மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.