Home World வலுவடைந்த மொக்கா சூறாவளி

வலுவடைந்த மொக்கா சூறாவளி

0

மொக்கா’ சூறாவளியின் வலு மேலும் அதிகரித்த நிலையில் பங்களாதேஷ் மற்றும் மியன்மாரின் கரையோர பகுதிகளை தாக்கியுள்ளது.

இதனையடுத்து அங்கு கடும் மழையுடனான வானிலை நிலவுவதுடன் மணித்தியாலத்துக்கு 120 மைல் வேகத்தில் கடும் காற்று வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலைக்கொண்டுள்ள குறித்த சூறாவளி காரணமாக கரையோர பிரதேசங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் சுமார் 4 மீற்றருக்கும், அதிகமாக உயரத்தில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 5 இலட்சம் பொது மக்கள் பாதுகாப்பான பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஏராளமான வீடுகள் பகுதியளவில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version