Home Srilanka யாழ்ப்பாண கல்வி வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள்

யாழ்ப்பாண கல்வி வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள்

0

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆங்கில மொழி மூலமான விஞ்ஞான பரீட்சையில் தனியார் கல்வி நிலைத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த வாரம் யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூலம் விஞ்ஞான பரீட்சை இடம் பெற்றது.

குறித்த பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாள் ஏற்கனவே தனியார் கல்வி நிலையம் ஒன்றினால் வழங்கப்பட்ட பரீட்சை வினாத்தாள் என்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version