இலங்கையின் நலனுக்காக சீனா எடுத்துள்ள முடிவு

இலங்கையின் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் இலங்கைக்கு உதவும் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், அதன் கடன் சுமையை எளிதாக்கவும் மற்றும் நிலையான வளர்ச்சியை அடையவும் உதவுவதில் சாதகமான பங்கை வகிக்கக்கூடிய தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது.
உத்தியோகபூர்வ இருதரப்பு கடனளிப்பாளரான சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, இலங்கைக்கு நிதியளிப்பு ஆதரவு ஆவணத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடன் நிவாரணம் தொடர்பாக இலங்கையுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொள்வதில் தொடர்புடைய நிதி நிறுவனத்திற்கு சீனா ஆதரவளிக்கிறது என்பதை அவர் மீண்டும் இதன்போது வலியுறுத்தினார்.