மீண்டும் வேட்பு மனுக்கள் கோரப்படலாம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீண்டும் புதிதாக கோரப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் விசேட பிரேரணை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் புதிய எல்லை மீள்நிர்ணய வர்த்தமானி வெளியாக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அவ்வாறு புதிய எல்லை மீள்நிர்ணய வர்த்தமானி வெளியிடப்பட்டால், தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாக மீண்டும் வேட்பு மனுக்கள் கோரப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
Please follow and like us: