இலங்கைக்கு கிடைக்கவுள்ள 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

இந்த ஆண்டு இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இம்மாதம் ஒப்புதலாகி, அதன் முதலாவது கடன் தொகை இம்மாத இறுதிக்குள் கிடைக்கும்.

IMF ஒப்புதல் கிடைத்தப்பின்னர் இலங்கைக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய அமைப்புகளில் இருந்து 7 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் கிடைக்கவுள்ளன.

இதனூடாக இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் பல மடங்கு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி டொலர் பெறுமதி மேலும் குறைவடைந்து இலங்கை ரூபாய் இன்னும் வலுவடையும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

Please follow and like us: