Tuesday, February 18, 2025
HomeSrilankaயாழில் ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞர் கந்தக்காட்டில் புனர்வாழ்வுக்கு!

யாழில் ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞர் கந்தக்காட்டில் புனர்வாழ்வுக்கு!

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் பயன்படுத்திய 21 வயதான இளைஞர் ஒருவர் நீதிமன்றப் பணிப்புக்கு அமைவாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு இளைஞர் அடிமையானதையடுத்து வீட்டார் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். பொலிஸார் இளைஞனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் ஊடாக அவரைக் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments