Sunday, February 9, 2025
HomeSrilankaவிரும்பிய தீர்வைக் குறுக்கு வழியில் பெற சம்பந்தன் குழு முயற்சி! - பந்துல குற்றச்சாட்டு.

விரும்பிய தீர்வைக் குறுக்கு வழியில் பெற சம்பந்தன் குழு முயற்சி! – பந்துல குற்றச்சாட்டு.

தாங்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தட்டிப்பறிக்கலாம் என்று சம்பந்தன் தலைமையிலான குழுவினர் முயல்கின்றனர் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், இந்தியாவை வைத்து இலங்கையை மிரட்டலாம் எனச் சம்பந்தன் குழுவினர் எண்ணுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இலங்கை இறைமையுள்ள நாடு. எமக்கென்று ஒரு ஜனாதிபதி உள்ளார். அரசு உண்டு. பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான நாடாளுமன்றமே முடிவு செய்யும்” – என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments