இலங்கை கடற்பகுதியில் கப்பல் ஒன்று கரை ஒதுங்கியிருந்த நிலையில் கடற்படை கப்பல் மூலம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டதாக தலைமன்னாரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கப்பல் சரக்குகளை ஏற்றுவதற்கும் கப்பல்களுக்கு நீர் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படும் இழுவைப்படகு என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் அதிக காற்றின் நிலை காரணமாக குறித்த கப்பல் இந்நாட்டின் கரையை வந்தடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னாரம் பொலிஸார் மற்றும் தலைமன்னார் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.